இந்தியா
தெலுங்கானாவில் நாளை முதல் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை துவக்கம்!
தெலுங்கானாவில் நாளை முதல் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலின் போது பெண்களுக்கு இலவச பேருந்து வசதி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன்படி, வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இலவச பேருந்து சேவை நாளை (டிசம்பர் 9ஆம் தேதி) முதல் தொடங்கப்பட உள்ளது.