இந்தியா

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: கைதான 4 பேரை ஏழு நாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறலில் ஈடுட்ட சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து திடீரென கீழே குதித்து வண்ணப் புகை குண்டுகளை வீசிய மனோரஞ்சன், சாகர் ஷர்மா, நாடாளுமன்ற வளாகத்தில் புகை குண்டுகளை வீசி முழக்கமிட்ட அமோல் ஷிண்டே, நீலம் தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 4 பேரும் தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்குகளை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + one =

Back to top button
error: