மிசோரம் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் ஒரு பகுதியாக மிசோரமில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் எண்ணும் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக திட்டமிடப்பட்ட டிசம்பர் 3 ஆம் தேதியிலிருந்து மறுநாள் டிசம்பர் 4 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆனால், கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மிசோரமில், இந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரார்த்தனை என்பதால், மாநிலம் முழுவதும் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளை கருத்தில் கொண்டு, வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்திடம் முறையீடுகள் வந்துள்ளன.
மிசோரம் தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட முறையீடுகளை இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தேதி திருத்தப்பட்டு டிசம்பர் 4-ம் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.