இந்தியா

வெங்காய ஏற்றுமதிக்கு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு தடை

வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெரிய வெங்காயம் தற்போது கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெங்காய விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களை காக்கும் நடவடிக்கையாக அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மற்ற நாடுகளின் தேவைக்கு ஏற்ப வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

forty eight − = forty seven

Back to top button
error: