இந்தியா
கேரளாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. ஒரே நாளில் 230 பேருக்கு தொற்று உறுதி!!
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது.
இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.