இட்லி, தோசைக்கு அருமை.. இந்த சிக்கன் சால்னா செய்து சுவைத்து பாருங்க..!
சிக்கன் சால்னா எப்படி செய்வது என்று இப்பதிவில் காணலாம். இந்த சால்னா இட்லி, தோசை, புரோட்டா போன்ற உணவுகளுக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
எலும்பு இல்லாத சிக்கன் – அரை கிலோ
கருவேப்பிலை – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
மல்லி இலை – கால் கட்டு
பிரியாணி இலை – ஒன்று
பட்டை – சிறியதாக இரண்டு
கிராம்பு – இரண்டு
ஏலக்காய் – இரண்டு
எலுமிச்சம் பழச்சாறு – இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் – இரண்டு தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
சோம்பு – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி – தேவையான அளவு
பூண்டு – தேவையான அளவு
கொத்தமல்லி – இரண்டு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – இரண்டு
துருவிய தேங்காய் – கால் கப்
மிளகு – ஒன்றரை தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
செய்முறை
மிளகு, சீரகம், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், துருவிய தேங்காய் என அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் சிக்கனை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி, அரை தேக்கரண்டி உப்பு, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிச் சூடு செய்து பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு என அனைத்தையும் சேர்த்து நன்கு வாசம் வரும் வரையில் வறுத்துக் கொள்ளவும்.
மேற்கண்டவற்றுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இப்போது மேற்கண்டவற்றுடன் ஊற வைத்துள்ள சிக்கன், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
மேற்கண்டவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து தனியே வரும் வரை கொதிக்க விடவும். குழம்பு சிறிது தண்ணியாக இருக்க வேண்டும். பின்னர் மல்லித் தழை தூவி பரிமாறலாம்.
இதோ சுவையான மட்டன் சால்னா தயார். இதனை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.