இந்தியாஉலகம்

பிரதமர் மோடியை சந்தித்தார் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி!

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்க ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று செவ்வாய்க்கிழமை புதுதில்லியில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை இணக்கமாகத் தீர்ப்பது ஆகியவை முக்கிய தலைப்புகளாக விவாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த வாங் யி, தனது பயணத்தின் ஒரு பகுதியாக இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த சந்தர்ப்பத்தில், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை குறித்த சிறப்பு பிரதிநிதிகள் மட்டத்திலான 24வது சுற்று பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. எல்லை வர்த்தகம், நதிநீர் தகவல் பரிமாற்றம், இணைப்பு, வர்த்தக உறவுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் போன்ற பல முக்கிய பிரச்சினைகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாடு நடைபெறும் சூழலில் வாங் யியின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: