விளம்பரம்

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் 1,000 அதிகாரி பணியிடங்கள்: தமிழகத்தில் மட்டும் 65 இடங்கள் – விண்ணப்பிக்க ஏப்ரல் 20 கடைசி நாள்!

இந்தியாவின் பழமையான மற்றும் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி’ (Punjab & Sind Bank), நாடு முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 1908-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, வங்கித்துறையில் கால்பதிக்க விரும்பும் அனுபவமுள்ள இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

1,000 பிரம்மாண்ட காலிப்பணியிடங்கள்

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிளைகளில் மொத்தம் 1,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, தமிழ்நாட்டில் மட்டும் 65 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி மற்றும் அனுபவம்

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும்.

இது நேரடி அதிகாரி நிலை பணி என்பதால் அனுபவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பிற வணிக வங்கிகள் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் அதிகாரியாகக் குறைந்தபட்சம் 18 மாதங்கள் (ஒன்றரை வருடங்கள்) பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு மற்றும் சம்பள விவரம்

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். (அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு).

தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு மாதம் ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரை அடிப்படை ஊதியத்துடன் கூடிய இதர வங்கிச் சலுகைகளும் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் இணையதளம்

தகுதியுள்ள நபர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://punjabandsind.bank.in வாயிலாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

கட்டணம்: பொது மற்றும் இதர பிரிவினருக்கு ரூ. 850 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்குக் கட்டணச் சலுகையாக வெறும் ரூ. 100 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

கடைசி நாள்!

இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 20, 2026 கடைசி நாளாகும். எனவே, வங்கித்துறையில் அனுபவம் கொண்ட தகுதியான நபர்கள் இந்தக் காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பகிர்வு:

0 கருத்துக்கள்

கருத்து தெரிவிக்க


அறிவிப்புகள் 0
விளம்பரம்
விளம்பரம்
error: