Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை: மத்திய அரசு அதிரடி விளக்கம்

புதுடெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு (LPG) பற்றாக்குறை நிலவுவதாகப் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இன்று முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்திற்கு ஆளாகி எரிபொருளைக் குவித்து வைக்க வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சமையல் எரிவாயு உற்பத்தி 40% அதிகரிப்பு

உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், எல்பிஜி (LPG) சிலிண்டர் உற்பத்தி சுமார் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிலிண்டர் விநியோகத்தில் எவ்விதத் தடையுமில்லை என்று உறுதி அளித்துள்ள அரசு, விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு மற்றும் விநியோக அங்கீகாரக் குறியீடு (DAC) முறையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

lpg cylinders

பெட்ரோல் மற்றும் டீசலைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே போதிய அளவு உற்பத்தி செய்யப்படுவதால், தற்போதைய சூழலில் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisement

வணிக நிறுவனங்களுக்கு பிஎன்ஜி (PNG) கட்டாயம்?

வணிக ரீதியிலான எல்பிஜி பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்கள் குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பிற்கு மாறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஊக்கத்தொகை: பிஎன்ஜி இணைப்பிற்கு மாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 10 சதவீத வணிக எல்பிஜி ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சலுகைகள்: இதற்காக நகர எரிவாயு விநியோக (CGT) நிறுவனங்கள் பல்வேறு ஊக்கத்தொகைகளை வழங்கி வருவதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

முன்னுரிமைத் துறைகளும் கூடுதல் ஒதுக்கீடும்

சமையல் எரிபொருளுக்கு மாற்றாக மாநிலங்களுக்குக் கூடுதலாக 48,000 கிலோலிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு விநியோகத்தில் வீட்டு உபயோகத் தேவைகள் மற்றும் சிஎன்ஜி (CNG) போக்குவரத்து போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தூய்மையான எரிசக்தியை நோக்கி…

நாடு முழுவதும் சிஜிடி (CGT) வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலமும், குழாய்வழி எரிவாயுப் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும் தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்று விளக்கப்பட்டுள்ளது. வதந்திகளை நம்பி பெட்ரோல் நிலையங்களில் கூட்டமாகத் திரள்வதைத் தவிர்த்து, வழக்கமான முறையில் எரிபொருளைப் பயன்படுத்துமாறு அரசு மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

ZD4tzb

Advertisement
Advertisement