ஆன்மீகம்

வரம் அருளும் வரலட்சுமி வழிபாடு

பெண்களால் மேற்கொள்ளப்படும் விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், முதன்மையானதாகவும் இருப்பது வரலட்சுமி விரதமாகும்.

வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் முக்கியமான விரதம் ஆகும்.

சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், தங்களின் குடும்பங்கள் செல்வ, செழிப்போடு இருக்கவும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தினை மேற்கொள்வது வழக்கம். திருமணம் ஆகாதவர்கள் இதனைக் கடைபிடிக்க விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை.

வரலட்சுமி விரதம் இருக்கும் முறை

பத்ரச்ரவஸ் என்ற மன்னன், சுரசந்திரிகா தம்பதியரின் மகள் சியாமபாலா. இவர்கள் தனது மகளான சியாமபாலாவை சக்கரவர்த்தியான மாலாதரனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளான்.

அப்போது, ஒருமுறை மகாலட்சுமி வயதான சுமங்கலி வேடத்தில், தோன்றி சுரசந்திரிகா விடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி எடுத்துறைத்து அதை கடைபிடிக்குமாறு கூறினாள்.

ஆனால், சுரசந்திரிகாவோ லட்சுமி தேவியை யாரோ எனக் கருதி கோபத்தில் மகாலட்சுமியை விரட்டியடித்தாள்.

லட்சுமி தேவியை விரட்டியதால், சுரசந்திரிகாவும், பத்ரச்ரவஸ் மன்னனும் செல்வங்களை இழந்து, நாட்டையும் இழந்து வறுமை நிலைக்குச் சென்றனர்.

இதைக் கேட்டு மனம் வருந்திய சியாமபாலா, லட்சுமி தேவியை சமாதானப் படுத்தி அவரிடமிருந்து வரலட்சுமி விரதத்தைப் பற்றி அறிந்து கொண்டு விரதம் கடைபிடிக்க ஆரம்பித்தாள்.

இந்த விரதத்தின் மகிமையால் அவள் மிகுந்த செல்வ சிறப்பை அடைந்தாள்.

இதை அறிந்த பின்பு, லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோரும், அந்த விரதத்தை கடைப்பிடித்தனர். அதன் பிறகு சுரசந்திரிகா தான் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றாள்.

மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத நாளாகும்.

சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் உண்டாகும்.

சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித செல்வங்கள் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: