உலகம்

41 நாடுகளுக்கு பயணத் தடை விதித்தார் டிரம்ப்..!

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், மற்றொரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளார். பாதுகாப்பு தொடர்பான சமரசமற்ற முடிவுகளின் ஒரு பகுதியாக, 41 நாடுகள் பயணத் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடையாளம் காண அமெரிக்காவிற்குள் நுழைய முயலும் அனைத்து வெளிநாட்டினருக்கும் தீவிர பாதுகாப்பு சோதனைகளை நடத்த ஜனவரி 20 அன்று நிர்வாக உத்தரவை பிறப்பித்த டிரம்ப், 41 நாடுகளுக்கு புதிய பயணத் தடையை விதித்தார்.

புதிதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் 41 நாடுகளையும் மூன்று தனித்தனி பிரிவுகளாக பிரித்தது. இவற்றில் முக்கியமாக ஈரான், ஆப்கானிஸ்தான், சிரியா, காசா பகுதி, லிபியா, சோமாலியா, ஏமன், கியூபா மற்றும் வட கொரியா போன்ற முஸ்லிம் நாடுகளும் அடங்கும். இந்த நாடுகளுக்கான விசாக்கள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்படும்.

இரண்டாவது பிரிவில் தெற்கு சூடான், ஹைட்டி, லாவோஸ் மற்றும் எரித்திரியா போன்ற ஐந்து நாடுகள் அடங்கும். இந்த நாடுகளிலிருந்து வரும் விசாக்கள் பகுதியளவு நிறுத்தி வைக்கப்படும்.

மூன்றாவது பிரிவில் பாகிஸ்தான், பூட்டான் மற்றும் மியான்மர் உள்ளிட்ட 26 நாடுகள் அடங்கும்.

டொனால்ட் டிரம்ப் முதல் அதிபராக இருந்தபோது ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு முதன்முதலில் தடை விதித்தார். இந்தக் கொள்கை 2018 ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு பல மாற்றங்களுக்கு உட்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: