Skip to content
Daily Tamilnadu
திங்கள், 13 ஜூலை 2026
BREAKING
ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து! ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து!
Advertisement

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் இதுதான்!

பாகிஸ்தானின் லாகூர், உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காற்று தர கண்காணிப்பு நிறுவனமான ‘IQAir’ வெளியிட்ட பட்டியலில் லாகூர் முதலிடத்தில் உள்ளது.

புதன்கிழமை புள்ளிவிவரங்களின்படி, லாகூரின் காற்று தர குறியீடு (AQI) 452 ஆக பதிவாகியுள்ளது. பாகிஸ்தானின் மற்றொரு முக்கிய நகரமான கராச்சி, 179 AQI உடன் அதே பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

Advertisement

கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானில் காற்று மாசுபாடு ஒரு கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடியாக மாறியுள்ளது. லாகூர் உட்பட பல நகரங்கள், குறிப்பாக குளிர்காலத்தில் அடர்ந்த புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளன.

தொழில்துறை கழிவுகள், வாகனங்களிலிருந்து வரும் புகை மற்றும் பயிர் எச்சங்களை எரித்தல் ஆகியவை இந்த நிலைமைக்கு முக்கிய காரணங்கள். செவ்வாயன்று, லாகூரின் AQI 501 ஆகவும், கராச்சி 178 AQI உடன் ஆறாவது இடத்திலும் இருந்தது.

இந்த சூழலில், IQAir பாகிஸ்தானுக்கு சிறப்பு காற்று தர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள் இருக்கவும், வெளியே செல்ல வேண்டியிருந்தால் முகமூடிகளை அணியவும் அறிவுறுத்தியுள்ளது. வீடுகளில் ஜன்னல்களை மூடி வைத்திருப்பது மற்றும் காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது

Advertisement

ஜனவரி 17 அன்று பஞ்சாப் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) வெளியிட்ட தரவுகளின்படி, பஞ்சாபின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் அபாயகரமான அளவை எட்டியுள்ளது. முசாபர்கரில் 291, ரஹிம் யார் கானில் 279 மற்றும் லாகூரில் 274 ஆக AQI பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

rNZrPX

Advertisement
Advertisement