தொழில்நுட்பம்

ஜியோ ஏர் ஃபைபர் பயனர்களுக்கு நல்ல செய்தி.. 50 நாட்களுக்கு இலவச சேவை.. உடனே முந்துங்கள்!!

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது பயனாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

தற்போது ஜியோ ஏர்ஃபைபர் பயனாளர்களுக்கு, விளம்பர சலுகையாக 50 நாட்களுக்கு இலவச சேவையை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

ஜியோ ஏர்ஃபைபர் 50 நாட்கள் இலவச சலுகை விவரங்கள்

ஜியோ ஏர்ஃபைபருக்கான 50 நாட்கள் இலவசச் சலுகையானது, 2 வாரங்களுக்கு மேல் உள்ள 5ஜி சாதனத்தில் நெட்வொர்க்கில் உள்ள ஜியோ ட்ரூ5ஜி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று ஜியோ கூறியுள்ளது. அதாவது, ஆஃபரைப் பெறுவதற்கு வாடிக்கையாளர் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு ஜியோவின் True 5G சேவையைப் பயன்படுத்த வேண்டும். ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பைப் பெற அதே தகுதியான எண் பயன்படுத்தப்படும்.

மேலும், வாடிக்கையாளர் ரூ.599 மற்றும் அதற்கு மேற்பட்ட OTT திட்டங்களுக்கு 6 அல்லது 12 மாதங்களுக்கு முன்பணம் செலுத்தினால் மட்டுமே சலுகை பொருந்தும். பயனரின் MyJio கணக்கில் ஏர்ஃபைபர் செயல்படுத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சலுகையின் கீழ் தள்ளுபடி வவுச்சர் வரவு வைக்கப்படும்.

மேலும், ரூ.599 பிளான் தேர்வு செய்தால், 30 mbps வேகத்தில் 1000 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு 550 க்கும் மேற்பட்ட டிவி சேனல் மற்றும் 11 OTT பயன்பாடு அணுகலையும் இலவசமாக பெறலாம்.

அதேபோல் ரூ.899 பிளானை தேர்வு செய்தால், 100 mbps வேகத்தில் 1000 ஜிபி டேட்டாவை பெறலாம். அதோடு 550 க்கும் மேற்பட்ட டிவி சேனல் மற்றும் பிரபலமான OTT பயன்பாடு அணுகலையும் இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventy four − 73 =

Back to top button
error: