புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று மார்ச் 11ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு மார்ச் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 16ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.