தமிழ்நாடுமாவட்டம்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட தகவலின்படி,

தென் மாவட்டங்களுக்கு செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும்.

செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

ஈசிஆர், பூந்தமல்லி வழியாக செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். விழுப்புரம் கோட்டத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eight =

Back to top button
error: