தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை முன்னறிப்பு குறித்த அறிக்கை வெளியாகி இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதனால் ஜன. 24 முதல் ஜன. 25 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். அதே போல அதிகாலை வேளையில் இலேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஜன. 26 முதல் ஜன. 30 வரை வறண்ட வானிலை நிலவும் என வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வட மாநிலங்களை போல தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் ஜன. 24 மற்றும் ஜன. 25 ஆகிய நாட்களில் உறைபனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + three =

Back to top button
error: