2024-2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று (திங்கட்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதன்முறையாக பட்ஜெட்டை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் பட்ஜெட் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் அதிகம் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என, தமிழக மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.