தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியை விட 50 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. டிசம்பர் முழுவதும் மழை பெய்தாலும் கடந்த நான்கு நாட்களாக பெய்த மழை மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. ஒரு மாத மழை ஒரே நாளில் பெய்தது.
இதனால் தேனி மாவட்டத்தில் ஆறுகள், ஓடைகள், நீரூற்றுகள், அருவிகள் என எங்கு பார்த்தாலும் அனைத்தும் நிறைந்து காணப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை ஒரே நாளில் 3 அடியும், வைகை அணை 5 அடியும் உயர்ந்துள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. தற்போதும் அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3699 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.25 அடியை தாண்டியுள்ளது. அதாவது சுமார் 140 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2518 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.