தமிழ்நாடுமாவட்டம்

TANGEDCO செயலியில் புகாரளிக்கும் வசதி அறிமுகம்!!

மின் தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின் கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களை செல்போன் செயலில் புகாரளிக்கும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

மின் கட்டணத்தை, எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் செலுத்த, ‘TANGEDCO’ என்ற மொபைல் போன் செயலியை, மின் வாரியம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.

அந்த செயலியில், தற்போது ‘கம்ப்ளையின்ட்’ என்ற பகுதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்த இடத்தில் இருந்து செயலியை இயக்குகிறோமோ, ‘மேப்’ வாயிலாக சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக முகவரி தானாகவே செயலியில் வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 − = thirty four

Back to top button
error: