தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று (ஜனவரி 20) அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று (ஜன.20) மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் அதையொட்டி பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதனால், இன்று தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் ஜன.20 இரவு உறைபனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.20) அடுத்த 3 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ eighty six = ninety

Back to top button
error: