தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்து துறை சார்பாக 16,000 மேற்பட்ட சிறப்பு மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் தாங்கள் பணிபுரியும் இடத்திற்கு திரும்ப ஏதுவாக ஜனவரி 18ஆம் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் தேவை கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிலாளர் நலத்துறை சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து நாளை (ஜன.19) பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். விரைவில் அனைத்து பேருந்துகளும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.