தமிழ்நாடு
269 கோடி மதிப்பீட்டில் ஓட்டுநர் இல்லா 10 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம் – சென்னை மெட்ரோ நிறுவனம்
ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 10 மெட்ரோ ரயில்களை வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை, அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.
அதன்படி ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் 3 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 269 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ இரயில்களை 28 மாதங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நான்காவது வழித்தடத்தில் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ இரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அல்ஸ்டடோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு 26 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.