தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
17.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். தமிழகத்தின் சில இடங்களில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
18.01.2024: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். தமிழகத்தின் சில இடங்களில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
19.01.2024: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
20.01.2024 – 23.01.2024; தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.