தமிழ்நாடுமாவட்டம்

கிளாம்பாக்கத்தில் ஜன.1 முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்!!

ஜனவரி 1ம் தேதி முதல், கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு வசதியாகவும், சென்னை கிளாம்பாக்கத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், ரூ.393 கோடியே 74 லட்சம் செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 1ம் தேதி முதல் தென்மண்டல மக்களுக்கான பேருந்துகள் புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = six

Back to top button
error: