தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. இதன்படி கோவை மாவட்டத்தில் குறிச்சி, இருகூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
குறிச்சி துணை மின் நிலையம்:
சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி.காலனி, மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி).
இருகூா் துணை மின் நிலையம்:
இருகூா், ஒண்டிப்புதூா், ஒட்டா்பாளையம், ராவத்தூா், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூா், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன்புதூா்.