இந்தியாதமிழ்நாடு

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு நாளை தமிழகம் வருகை..!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு நாளை தமிழகம் வருகிறது.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. பெரும்பாலான வீடுகளில் மழைநீர் தேங்கியதால், பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து விசாரிக்க மத்தியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நாளை (டிசம்பர் 11) தமிழகம் வருகை தரவுள்ளனர். வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்த பிறகு மத்திய அரசின் விரிவான மதிப்பீடு தயாரிக்கப்படும் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ one = three

Back to top button
error: