தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று முதல் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. இந்த தேர்வில் மாநிலம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இந்த கல்வியாண்டில், 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் – ஏப்ரலில் நடைபெற உள்ளது.
அதன் படி, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 4 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று (பிப். 12) தொடங்கி பிப். 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.