விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுதேவன்பட்டியில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதனைத் அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 7 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.