இந்தியா
பொங்கல் பரிசாக ரூ.500 வங்கி கணக்கிற்கு அனுப்ப முடிவு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பொங்கல் பரிசு பொருட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக தொகையை வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி மாநிலத்தில் உள்ள 3,53,249 ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் ரூ.500-ஐ நேரடியாக செலுத்த திட்டமிட்டுள்ளனர். அதேபோல் சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச துணிக்கு பதிலாக ரூ.1,000 வழங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.