இளம் மில்லியனர்கள் பட்டியலில் சீனா, பிரிட்டனை முந்தியது இந்தியா!
இளம் தொழில்முனைவோருக்கான உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அவென்டஸ் வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் ஹுருன் இந்தியா நிறுவனம் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, 40 வயதுக்குட்பட்ட ‘சென்டிமில்லியனர்கள்’ ($100 மில்லியனுக்கும் அதிகமான செல்வம்) பட்டியலில் சீனா மற்றும் இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 505 இளம் தொழில்முனைவோரில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 201 பேர் என்ற சாதனை எண்ணிக்கையுடன் முன்னிலை வகிக்கின்றனர்; இதில் குறிப்பாக 48 தொழில்முனைவோருடன் பெங்களூரு நகரம் ‘இந்தியாவின் இளம் தொழில்முனைவோர் தலைநகரம்’ (U40 Capital) என்ற அந்தஸ்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியப் பட்டியலில் உள்ளவர்களில் 83 சதவீதம் பேர் சொந்த முயற்சியால் உயர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் என்பது குறிப்பிடத்தக்கது; இவர்கள் மென்பொருள், சுகாதாரம் மற்றும் நிதிச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் சுமார் 357 பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனங்களை உருவாக்கி, 4.43 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இந்த இளம் தலைமுறையினர் மிக முக்கியப் பங்காற்றி வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், வரும் காலங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இவர்களே முன்னின்று நடத்துவார்கள் என்று இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
India’s founders are entering a defining phase of leadership.
The Uth Series has traced this evolution over time from early conviction to scale and long-term influence.
The Avendus Wealth – HURUN INDIA U40 List 2025 marks its culmination, recognising founders and business… pic.twitter.com/Q1RDdmT3Na
— Avendus (@Avendus) January 21, 2026
0 கருத்துக்கள்