இந்தியா
நாடு முழுவதும் புதிய வகை J.N. 1 கொரோனா தொற்றுக்கு 511 பேர் பாதிப்பு!
நாடு முழுவதும் புதிய வகை J.N. 1 கொரோனாத் தொற்று பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 511-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கா்நாடக மாநிலத்தில் 199 பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேரளாவில் 148, கோவாவில் 47, குஜராத்தில் 36, மகாராஷ்டிரத்தில் 32, தமிழ்நாட்டில் 26, டெல்லியில் 15, ராஜஸ்தானில் 4, தெலங்கானாவில் 2, ஒடிஸா மற்றும் ஹரியானா மாநிலத்தில் தலா ஒருவக்கு என தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 440-ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.