ஆரோக்கியம்

சிகப்பு கற்றாழையின் மகத்துவம்!

பச்சை சோற்றுக்கற்றாழையின் நன்மைகள் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், அதன் அபூர்வ வகையான சிகப்பு சோற்றுக் கற்றாழை பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இந்த வித்தியாசமான மூலிகையின் மகத்துவம் என்ன? ஆரோக்கியத்திற்கு அது அளிக்கும் பங்களிப்புகள் என்னென்ன? குறித்து இந்த பதிவில் அறிவோம்.

மகத்துவம்:

சிகப்பு சோற்றுக்கற்றாழை சாதாரண பச்சை சோற்றுக்கற்றாழையை விட அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்டுள்ளதால் இதற்கென்று தனிச்சிறப்பு உள்ளது. ஆந்த்ராக்வினோன் (anthraquinones) எனும் வேதிப்பொருட்களும் இதில் அதிகம். இவையே மருத்துவ குணங்களை அள்ளித் தருகின்றன.

நன்மைகள்:

சிகப்பு சோற்றுக்கற்றாழை புற ஊதாக் கதிர்களினால் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் சிராய்ப்புகள், தீக்காயங்கள், தழும்புகள் மறையவும் வழி வகுக்கிறது. இதன் சாறு தடவுவதால் சருமம் இளமையுடனும் பொலிவுடனும் விளங்கும்.

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சிகப்பு சோற்றுக்கற்றாழை சிறப்பாக செயல்படுகிறது. இதை நீரிழிவுக்கான துணை மருத்துவமாக பயன்படுத்தலாம்.

பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறனை சிகப்பு சோற்றுக்கற்றாழை அதிகரிக்கிறது. குறிப்பாக, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை எதிர்க்கும் வல்லமை சிகப்பு கற்றாழைக்கு உண்டு. இதில் இருக்கும் பாலிசாக்கரைடுகள் (polysaccharides) புற்றுநோய் கட்டிகள் வளர்வதை தடுக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = four

Back to top button
error: