மொறு மொறு ஓமப்பொடி இனி வீட்டிலேயே செய்யலாம்!!
ஸ்னாக்ஸ் வகைகளில் மிகவும் பிரபலமானது ஓமப்பொடி. இது இந்தியாவில் அதிகமாக மாலை நேரங்களில் டீயுடன் சாப்பிட கூடிய சிற்றுண்டியாக இருக்கிறது. இப்போது மொறு மொறுன்னு சுவையான ஓமப்பொடி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஓமம்- 1 ஸ்பூன்
கடலை மாவு- 100 கிராம்
அரிசி மாவு- 50 கிராம்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை
வெண்ணெய்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- 2 கொத்து
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஓமத்தை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து, ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.
இப்போது, சேர்த்துள்ள பொருட்களை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு, இதில் வடிகட்டி வைத்த ஓமப்பொடி தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். அதாவது முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ளுங்கள்.
தயார் செய்து வைத்துள்ள மாவினை முறுக்கு அச்சில் அதாவது சிரிய துளை உடைய அச்சில் வைத்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.
எண்ணெய் மிதமாக சூடான பதத்திற்கு வந்ததும் அதில் அச்சில் உள்ள மாவினை வட்டமாக பிழிந்து விடுங்கள். மாவினை எண்ணெய்யில் பிழியும் போது கவனமாக இருக்க வேண்டும்.
பிறகு இவை நன்றாக சிவந்ததும் அதனை திருப்பி போட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள். அடுத்து அதே எண்ணெயில் கருவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது தயார் செய்து வைத்துள்ள ஓமப்பொடியை மிதமான சூட்டில் கையால் உடைத்து கொள்ளுங்கள். பிறகு இதில் பொறித்த கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டால் சுவையான ஓமப்பொடி ரெடி..!