ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு சென்ற அரசுப் பேருந்து திருப்புல்லாணி பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டருக்கு வழி கொடுத்து சாலை ஓரம் நகர்ந்தது.
அப்போது, சருக்கலில் நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக அந்த பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.