ஒவ்வொரு 14 நிமிடத்திற்கும் ஒரு கார்! 23.4 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து மாருதி சுசுகி வரலாற்றுச் சாதனை!
இந்திய வாகனச் சந்தையின் முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி, 2025-26 நிதியாண்டில் மட்டும் சுமார் 23.4 லட்சம் கார்களை உற்பத்தி செய்து, இந்திய வாகனத் துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிலான புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சராசரியாக ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு காரை உற்பத்தி செய்யும் அளவிற்குத் தனது உற்பத்தித் திறனை அதிகரித்துள்ள இந்நிறுவனம், டிசையர், ஸ்விஃப்ட் மற்றும் எர்டிகா உள்ளிட்ட ஐந்து முக்கிய மாடல்களில் ஒவ்வொன்றையும் தலா 2 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தயாரித்து அசத்தியுள்ளது.
சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் உலகளாவிய ஆலைகளுக்கு மத்தியிலேயே, ஒரே நாட்டில் இவ்வளவு அதிகமான உற்பத்தியை எட்டிய ஒரே நிறுவனம் மாருதி சுசுகி மட்டுமே என்ற பெருமையையும் இது தேடித்தந்துள்ளது.
கடந்த நானரை தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்ட வலுவான வாகனச் சூழலமைப்பு, ஊழியர்களின் உழைப்பு மற்றும் அரசாங்கத்தின் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) போன்ற சாதகமான கொள்கைகளே இந்த வெற்றிக்குக் காரணம் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹிசாஷி டகேயுச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தனது உற்பத்தித் திறனை 40 லட்சம் யூனிட்டுகளாக உயர்த்தி, இந்தியாவை உலகின் ஒரு முக்கிய வாகன ஏற்றுமதி மையமாக மாற்றுவதே தங்களது அடுத்தகட்ட இலக்கு என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
How do you react to this story?
கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.
0 Comments