தென்னிந்தியாவின் புனித தலங்களில் ஒன்றான கேரளாவின் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலின் நடை நேற்று வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
இரண்டு மாதங்களுக்கு ஐயப்ப சுவாமி தரிசனம் கொடுப்பதால், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து செல்கின்றனர்.
சன்னதியின் நடை அர்ச்சகர்களால் ஆரம்பகால பக்தி மற்றும் பாரம்பரிய சடங்குகளுடன் திறக்கப்பட்டுள்ளது.
சாகர பக்தர் இருமுடி அணிந்து ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷமிட்டபடி வரிசையில் நின்று கடவுளை தரிசனம் செய்யும் வீடியோவை ANI ட்வீட் செய்துள்ளது.
சன்னிதானத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச பிரசாத விநியோகத்தை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
#WATCH | Kerala: The doors of Sabarimala Sree Dharma Sastha Temple were opened for darshan.
The temple is open for a two-month-long pilgrim season. pic.twitter.com/Mw5zMWxVju— ANI (@ANI) November 18, 2023