ஆன்மீகம்

சிவாலயத்தில் சிவனை வழிபட வேண்டிய முறைகள்

சிவாலயத்தில் சிவனை வழிபட வேண்டிய முறைகள் :

1. ஆலயத்தின் உள்ளே சென்று கை கால் முகம் கழுவி அல்லது ஆலயம் அருகிலுள்ள நதிகளிகளில் நீராடி முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்

2. பின் கொடி மரத்தை வணங்கி ஆண்கள் அஷ்டாங்கமாகவும் (நெடுசாண் கிடையாக கை,கால்கள் நீட்டி படுத்து வணங்குவது) பெண்கள் பஞ்சாங்கமாகவும் (முட்டியிட்டு வணங்குவது) விழுந்து வணங்க வேண்டும். பின்னர் பலிபீடத்தை வணங்கி ஆசை, காமம், குரோதம், கோபம் போன்ற தீய குணங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

3. தூய மனதுடன் துவார வினாயகர் துவார முருகர் ஆகியோரை வணங்கி பின் உள்ளே சென்று சூரிய சந்திரர்களை வணங்கி அடுத்து நந்தீஷ்வரரை (வில்வம் வைத்து) வணங்க வேண்டும்.

4. சிவனுக்கு பிடித்த வில்வம் மற்றும் பூக்கள் கொண்டு சென்று அடுத்து மூலவரான சிவபெருமானை பார்த்து “நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா” எனச்சொல்லி வணங்கி வணங்குதல் வேண்டும்.

5. இறைவனை நினைத்து தேவாரம் திருவாசகம் பாடல் பாடுதல், பாடல் பாடுவதன் இறைவன் அருகில் செல்லலாம்

6. அடுத்து குரு 63 மூவர் வள்ளி தெய்வானை, துர்க்கை, நடராஜப் பெருமானை வணங்கி வரவும்.

7. அடுத்து சிவாலயத்தின் அம்பிகையை அபிராமி அந்தாதி பாடி வணங்கவும்.

8. நிறைவாக சண்டிகேஸ்வரர் காலபைரவர் நவகிரகங்களை வணங்குதல் வேண்டும்.

9. அதன் பின் கொடி மரத்தை அடைந்து 1,3,5,7,9 என முறைப்படுத்தி பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் .பிரதக்ஷிணம் என்பது மெதுவாக நடத்தல் அடி அடியாக எனக்கொள்ளலாம் .அப்படி செய்தால் அஷ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என சாஸ்திரங்கள் சொல்லப்படுகின்றன.

10. பிரதட்க்ஷிணம் முடித்து 108 ,54,27 என்ற முறையில் ஜபம் செய்தால் மோட்சம் கிட்டும் 11.நிறைவாக நமஸ்காரம் செய்ய வேண்டும்.அப்படி செய்யும் போது நாம் செய்த பிழைகளும் விழுகின்றன. எழுப்போது பிழைகள் கூடவே வருவதில்லை. அப்போது எத்தனை தூசிகள் உடலில் ஓட்டி உள்ளனவோ அத்தனை வருடங்கள் மேலோகத்தில் சிறப்பாக விளங்குவான் (எழும்போது தூசிகள் தட்டக்கூடாது)

11. த்திரயங்க நமஸ்காரம் கைகளை தூக்கி தலையின் மேல் வைத்து வணங்குவது இதற்கு அஞ்சலி வந்தனம் என்று பெயர் 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் நமஸ்காரம் செய்ய வேண்டும்

12. சிவப்பிரசாதம் வாங்கி இடக்கையில் போடாமல் அப்படியே இட்டுக்கொள்ள வேண்டும். திருக்கோவிலில் எங்காவது வைத்து அசுத்தப்படுத்தக்கூடாது. அர்ச்சகர் கொடுக்கும் திருநீறு இறைவனே அளித்ததாக எண்ணி வீட்டில் அனைவருக்கும் தரவும்.

இம்முறை பின்பற்றி இறைவனை வணங்குங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: