
தென் கொரியாவில் பெரும் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது. இந்த தீயை அணைக்க அரசு அதிகாரிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் இதுவரை கிட்டத்தட்ட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு புத்த கோவிலும் எரிந்து நாசமானது. தற்போதைய நிலைமை குறித்து உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன் படி, வறண்ட காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. இதனால், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சுமார் 19 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 19 பேர் காயமடைந்தனர். தீயை அணைக்கச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது, அதில் விமானி உயிரிழந்தார். வுசாங் கவுண்டியில் தீ வேகமாகப் பரவி வருகிறது.
இதனால் 1300 ஆண்டுகள் பழமையான பழமையான கவுன்சா கோயில் எரிந்து நாசமானது. இருப்பினும், கோவிலில் இருந்த கலைப்பொருட்கள் உட்பட பல சிலைகள் முன்பே மற்ற கோயில்களுக்கு மாற்றப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீயை அணைக்க 10,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.