
ஐபிஎல் தொடரில் இன்று 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சண்டிகரில் நடைபெறுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்வு செய்தது. இந்தப் போட்டிக்கான அணியில் கே.கே.ஆர் ஒரு மாற்றத்தைச் செய்தது. ஆல்ரவுண்டர் மொயீன் அலிக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்சியா விளையாடுகிறார். பஞ்சாப் அணியில் ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் சேவியர் பார்ட்லெட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.