
அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டுக்கு சொந்தமான கிடங்குகளில் இந்திய தர நிர்ணய பணியகம் (BIS) சோதனை நடத்தியது. இதில் தரச் சான்றிதழ்கள் இல்லாத ஆயிரக்கணக்கான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அமேசானுக்குச் சொந்தமான ஒரு கிடங்கில் BIS அதிகாரிகள் 15 மணி நேர சோதனை நடத்தினர். இந்த நேரத்தில், கீசர்கள், மிக்சர்கள் உட்பட 3,500க்கும் மேற்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட்டின் துணை நிறுவனமான இன்ஸ்டாகார்ட் சர்வீசஸ், நடத்திய சோதனையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள காலணிகளை பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.