Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

ஐஆர்சிடிசி-யில் வேலைவாய்ப்பு: 84 பணியிடங்களுக்கு நேரடி நேர்காணல் – ரூ. 30,000 சம்பளத்தில் தென்னக ரயில்வேயில் பணியாற்ற அரிய வாய்ப்பு!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), தென்னக ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் பணிகளை மேற்கொள்வதற்காக, ஒப்பந்த அடிப்படையில் ‘விருந்தோம்பல் கண்காணிப்பாளர்’ (Hospitality Monitors) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணியிட விவரங்கள் மற்றும் தகுதிகள்

இந்த அறிவிப்பின் கீழ் மொத்தம் 84 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான கல்வி மற்றும் வயதுத் தகுதிகள் பின்வருமாறு:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc (Hospitality/Catering), BBA அல்லது MBA உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிபுரியும் இடம்: தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள ஐஆர்சிடிசி பிரிவுகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

ஊதியம் மற்றும் ஒப்பந்த காலம்

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 30,000 ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பணியானது தொடக்கத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அமையும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் விவரம்

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு ஏதுமில்லை. தகுதியுள்ளவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக ‘வாக்-இன் இன்டர்வியூ’ (Walk-in Interview) மூலம் பங்கேற்கலாம்.

நேர்காணல் நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 27 மற்றும் 28, 2026.

நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.

நேர்காணல் நடைபெறும் இடம்: 6A, தி ரெய்ன் ட்ரீ பிளேஸ், எண் 9, மெக் நிக்கோல்ஸ் சாலை, சேத்துப்பட்டு, சென்னை – 600 031.

இது குறித்த கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள irctc.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

CBD7Qa

Advertisement
Advertisement