இந்தியா

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பகுதி – அமெரிக்கா கருத்து

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதிதான் எனவும், எல்லைக் கட்டுப்பாடு கோடு தாண்டிய பகுதியைத் தங்களின் பிராந்தியமாக உரிமை கோரும் சீனாவின் முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் கூறிவரும் சீனா, அங்கு இந்திய தலைவா்கள் பயணம் மேற்கொள்ளும்போது எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடா்பாளா் வேதாந்த் படேல், அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் பிராந்தியமாகவே அமெரிக்கா அங்கீகரிப்பதாக கூறினார். அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ sixty three = sixty seven

Back to top button
error: