பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமம் அதிரடி ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி – வாடிக்கையாளர் பணம் என்னவாகும்?

By Web Admin |
Advertisement

வங்கிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைத் தொடர்ந்து மீறிய புகாரில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று (ஏப்ரல் 24) முதல் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

வங்கியின் செயல்பாடுகள் பொதுநலனுக்கு எதிராகவும், வைப்புதாரர்களின் நலன்களுக்குப் பாதகமாகவும் இருந்ததால், வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இந்த இறுதிக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இந்த உத்தரவின் மூலம் வங்கிப் பணிகளை மேற்கொள்ளப் பேடிஎம் நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பிச் செலுத்த வங்கியிடம் போதிய நிதி உள்ளதாக ரிசர்வ் வங்கி உறுதியளித்துள்ளது.

Advertisement

ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உரிமமே ரத்து செய்யப்பட்டுள்ளதால், வங்கியைக் கலைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள உயர் நீதிமன்றத்தை அணுகவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement