இஸ்ரேல்-ஈரான் மோதல்: பங்குச் சந்தை குறியீடு தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவு

By Web Admin |
Advertisement

இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக அதிகரித்த உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக நாட்டின் பங்குச் சந்தை குறியீடுகள் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக நாளாக சரிந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வியாழக்கிழமை 82 புள்ளிகள் சரிந்து 81,361 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 24,793 புள்ளிகளில் நிறைவடைந்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்திருப்பதும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இருப்பதும் முதலீட்டாளர்களைப் பாதித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். இதன் விளைவாக, நாட்டின் பங்குச் சந்தை குறியீடுகள் சரிந்தன.

Advertisement
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement