நாடாளுமன்ற தேர்தல்: பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள்!

 

நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 40 தொகுதிகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

இதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது தவிர வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் நாளை 19,000 துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். சென்னையில் 2000 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 
 
 
Exit mobile version