விருதுநகர் அருகே வெடி விபத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 

தமிழகத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக விபத்துகள் நடக்கின்றன. இந்நிலையில் விருதுநகர் அருகே கல்குவாரி வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

GEz9vQkbUAAuqhW

 

இந்த விவகாரத்தில், சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “குண்டுவெடிப்பில் 3 தொழிலாளர்கள் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். உடனடியாக மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன், இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு நிவாரண உதவி விரைவில் வழங்கப்படும்” என்றார்.

 
 
Exit mobile version