100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் உயர்வு: முழு விவரம் இங்கே..!

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் மக்களுக்கு வழங்கப்படும் தினக்கூலியை உயர்த்தி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, 2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.86,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிதியாண்டு தொடங்கும் நிலையில், அதே தேதியில் இருந்து இந்த அரசாணை அமலுக்கு வருகிறது.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஊதியம் 8.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.319 ஆக உள்ளது. சுமார் ரூ.27 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் புதுச்சேரிக்கும் ரூ.319 ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Exit mobile version