10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: மே 10ம் தேதி வெளியீடு

 

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12 முதல் 22 வரை தொடர்ந்தது.

 

இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் மே 10ம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

 
 
Exit mobile version