மணிப்பூரில் மெய்தே சமூகத்தின் எஸ்.டி அந்தஸ்து ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மணிப்பூரில் உள்ள பெரும்பான்மையான மெய்தே மக்களுக்கு எஸ்.டி. சமூக அந்தஸ்தை வழங்க வேண்டும் என அம்மாநில ஐகோர்ட் அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய குகி இன மக்களுக்கும், மெய்தே மக்களுக்கும் வன்முறை வெடித்தது.

இதனால் இரு தரப்பினரிடையே 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, பெண்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு மணிப்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், “முந்தைய உத்தரவு, உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வின் நிலைப்பாட்டுடன் முரணாக உள்ளது. எனவே மெய்தே மக்களுக்கு பரிந்துரை செய்த எஸ்.டி. அந்தஸ்து உத்தரவை திரும்பப் பெறுகிறோம்.” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 
 
 
Exit mobile version