5,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தோஷிபா திட்டம்..!

 

ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான தோஷிபா 5,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது, இது அதன் உள்நாட்டு பணியாளர்களில் 10 சதவீதமாகும். நிறுவனத்தை மறுசீரமைக்கவும், உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தவும் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான தோஷிபா சமீப காலமாக நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஜப்பானில் வேலை நீக்கம் மிகக் குறைவு. இப்போது தோஷிபாவின் முடிவு இந்த ஆண்டு நாட்டில் மிகப்பெரிய பணிநீக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
Exit mobile version